செய்திகள்
சீனாவிடம் இருந்து கைமாறும் மின்னுற்பத்தி திட்டங்கள்!!
வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவின் ஊடாக விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
” வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீனா, இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக அங்கிருந்து வாபஸ் பெற்று விட்டது.
ஆனால், “அதற்கு பதிலாக” அதே மின் உற்பத்தி கட்டமைப்பை மாலைத்தீவின் 12 ஆளில்லா தீவுகளில் முன்னேடுக்க அந்நாட்டு அரசுடன் சீனா உடன்பாடும் கண்டுள்ளது.
இந்நிலையில், அதேபோல் “அதற்கு பதிலாக” அதே நம்ம வடக்கு தீவுகளில் மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன் வர வேண்டும்.
ஏனெனில் இந்த இந்தியா-இலங்கை-சீனா கயிறு இழுப்புகளுக்கு மத்தியில் நம் நாட்டுக்கு, சுத்தமான மின்சாரம் தேவை.” எனத் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login