செய்திகள்
எரிவாயு சிலிண்டர்கள் சீல் வைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துங்கள்!
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை சமையல் எரிவாயு சிலிண்டர்களில் உபயோகிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எரிவாயு சிலிண்டர்களை சவர்க்கார நுரை மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு தனிப்பட்ட முறையில் பரிசோதிப்பது ஆபத்தானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் போது அவை சீல் வைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துங்கள் என நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜனக பத்திரத்ன தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login