செய்திகள்
கோப் குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
எதிர்வரும் 6 ஆம் திகதி கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தேர்தல்கள் மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற குழுவும், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக்குழுவும் கூடவுள்ளன.
பல நாடாளுமன்ற குழுக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கூடப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login