செய்திகள்
யாழ் இளைஞனின் மரணத்தில் சந்தேகம்
அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்படும் யாழ் சிறுப்பிட்டி இளைஞனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்பாட்டத்தின் போது இளைஞனின் மரணம் தொடர்பில் கவனம் செலுத்தி விசாரணை நடாத்த வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸார்,
குறித்த சம்பவத்தை நீதிமன்ற கவனத்திற்கு சட்டத்தரணி ஊடாக கொண்டு வருவதன் மூலம் மரணம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login