செய்திகள்
இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய சுகாதார வழிகாட்டல்கள்!!
இன்று (01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
அதற்கிணங்க,
- திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
- திறந்தவௌி கொண்டாட்டங்களில் 250 பேர் வரையில் கலந்துகொள்வதற்கு அனுமதி
- திருமண நிகழ்வுகளில் மதுபானத்துடனான விருந்துபசாரங்களுக்கு தொடர்ந்தும் தடை
- திரையரங்குகளில் ஒரு தடவையில் 75 வீதமானோருக்கு அனுமதி
- மரண சடங்குகளில் 20 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி
- வழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்
- வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகளில் ஒரே தடவையில் மூன்றில் ஒருவீதமானோருக்கே அனுமதி. அத்துடன், அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தல்
குறித்த தகவகவலுக்கமைய மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பேணுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
You must be logged in to post a comment Login