செய்திகள்
முன்னாள் அரசியல் கைதிக்கு TID அழைப்பு!!
முன்னாள் அரசியல் கைதி ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு (TID) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா – தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணையில்,
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் முதலாம் திகதி (2021-12-01) காலை 9.30 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு கெப்பிட்டல் கட்டிடம் நாரன்பிட்ட முகவரியில் 3ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login