செய்திகள்
நாட்டை அழித்த எந்த தரப்பினருடனும் உறவை ஏற்படுத்தப்போவதில்லை
திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெற்றால் பல பிரச்சினைகளிற்குத் தீர்வை காணமுடியும்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
நாட்டை திருடிய தரப்பினருடனும் மற்றும் அழித்த எந்த தரப்பினருடனும் உறவை ஏற்படுத்திக்கொள்ளப்போவதில்லை.
ஜேவிபி எந்த புதிய கூட்டணியிலும் தன்னை இணைத்துக்கொள்ளப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்
தேசிய மக்கள் சக்தி மக்கள் கூட்டணியொன்றை உருவாக்கும் அவர்கள் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான நிலைப்பாட்டை உருவாக்குவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login