செய்திகள்
அதிகரிக்கவுள்ள இலங்கை-இந்தியா விமான சேவை!!
இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
மேலும், கொவிட் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் .
இலங்கையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவுக்கான முழுமையான செயற்பாடுகளை மீள ஸ்தாபிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login