செய்திகள்
படகு விபத்து! – கிண்ணியா மேயர் விளக்கமறியலில்
கிண்ணியா நகர சபை மேயருக்கு எதிர்வரும் டிசெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கிண்ணியா – குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகரசபை மேயர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்க விசாரித்த நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login