செய்திகள்
இன்று முதல் அனுமதிக்கு வரும் இரசாயன உர இறக்குமதி!!!
இரசாயன உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையின் ஊடாகவே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் , இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான அனுமதியை தனியார் துறைக்கு வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தின் கசுளை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட இவைகளின் வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login