செய்திகள்
அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய இந்தியா
இந்தியா கொரோன தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.
இந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று குறைவாக இருப்பதால் கொரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாக நீக்குவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான் அறிவித்துள்ளார்.
இதன்படி பாடசாலைகள் முழு அளவில் இயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் யாவும் 100 சதவீதம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதே வேளை அரச ,தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களும் , வாடிக்கையாளர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login