செய்திகள்
இது ஆரம்பமே!! – சம்பிக்க எச்சரிக்கை
“ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையே கொழும்பு போராட்டம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அரச எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டு மக்களை துன்பத்துக்குள் தள்ளிய, தேசிய வளங்களை விற்பனை செய்த, அதேபோல் எதிர்காலத்தில் நாட்டை காட்டிக்கொடுக்கும் ராஜபக்ச அரசை வீழ்த்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே இன்று வீதியில் இறங்கியுள்ளோம்.” – எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.
அத்துடன், இது ஆரம்பம் மட்டுமே, 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகர்வுகள் அதிரடியாக இருக்கும். மக்களுடன் அரசு விளையாட முடியாது என்று போராட்டத்தில் பங்கேற்ற ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login