செய்திகள்
போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரமா இது..?
கொரோனாவுடன் விளையாட வேண்டாம். போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மக்களை வீதிக்கு இறக்கி, அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. அரசியல் செய்ய வேண்டும். ஆனால் மக்களை பணயம் வைக்க கூடாது. தேர்தல் வரட்டும். அப்போது மோதுவோம்.
அரசுக்குள் மோதல் என்கின்றனர். அவ்வாறு பெரிய பிரச்சினை இல்லை.
வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது அரசின் பலத்தை காணலாம். எனவே, வீதியில் இறங்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற கனவை எதிரணி தலைவர் காணக்கூடாது.
நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை காக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மாறாக இவ்வாறு செயற்படக்கூடாது.” – என்றார்.
You must be logged in to post a comment Login