செய்திகள்
சீரற்ற வானிலையால் உயர்ந்த மரக்கறிகளின் விலை!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உரத்தட்டுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தைகளில் மரக்கறிகளில் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் போஞ்சி 500 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கரட் 320 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பீட்ரூட், கோவா, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் என்பன 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் கறிமிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 600 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 170 ரூபாயாக உயர்வடைநதுள்ளது
மரக்கறிகளின் சடுதியான அதிகரிப்பினால் நுகர்வோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login