செய்திகள்
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் !
நாட்டில் குறித்த சில பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கும் பணி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
அந்த அடிப்படையில் நாளை முதல் அநுராதபுரம், பொலநறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென், மேல் மாகாணங்களிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர் நாட்டில் 10 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் செலுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login