செய்திகள்
பூஸ்டர் தடுப்பூசியை எதிர்த்தது WHO !!
பூஸ்டர் தடுப்பூசியை WHO எதிர்த்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவியதால் தடுப்பு மருந்தின் 3-வது டோசாக பூஸ்டர் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த சில நாடுகள் தெரிவித்துள்ளன.
இதற்கு WHO ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்தது வந்தது .
பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தால் ஏழைநாடுகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் பாதிப்பு அடையும் என்றும் தடுப்பூசி வினியோகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்றும் WHO தெரிவித்திருந்தது.
இக்காரணத்தால் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவதை நிறுத்த வேண்டும் என்று WHO கூறி வந்த நிலையில்அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியுள்ளதாக WHO கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை உலக சுகாதார அமைப்பு மீண்டும் கடுமையாக எதிர்த்துள்ளது. அத்திட்டத்தை கடுமையாக விமர்சனமும் செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login