செய்திகள்
வடக்கில் இளம் குற்றவாளிகள்: விசேட திட்டம் தயாரிப்பு
வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின் குற்றங்களை நிறுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில், விசேட நிகழ்ச்சித் தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பிரஜா காவற்துறையினர் வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வலப்புறம் வழிநடத்தும் வகையிலும், சமூக காவல் குழுக்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களைத் தெரிவு செய்து அவர்களின் விசேட திறமைகளை இனங்கண்டு இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே நோக்கமாகும்.
இந்த அணிகளை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login