செய்திகள்
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு – (காணொலி)
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் – என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
பல்வேறு காலப்பகுதியில், பல்வேறு காரணங்களால் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதிக்கு மேலதிகமாகவே இந்த 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2015 -2019 காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, நிவாரணம் வழங்க மேலதிகமாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.tamilnaadi.com
You must be logged in to post a comment Login