செய்திகள்
மக்களுக்கு நிவாரணம்! – எதிரணி ஒத்துழைப்பை கோருகிறார் பிரதமர் மஹிந்த
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் எனவும் அவர் கூறினார்.
அனர்த்த நிலையை எதிர்கொள்வதற்கு எதிரணியின் ஒத்துழைப்பையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று கோரினார்.
You must be logged in to post a comment Login