செய்திகள்
யாழில் 463 பேர் இடம்பெயர்வு
சீரற்ற காலநிலை காரணமாக 139 குடும்பங்களைச் சேர்ந்த 463 நபர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருகின்றனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6.30 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 7,584 குடும்பங்களைச் சேர்ந்த 25,508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 75 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக, யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி,கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றது.
You must be logged in to post a comment Login