செய்திகள்
இந்தியாவில் 40 பேரை கொன்ற கள்ளச்சாராயம்!!
இந்தியாவில் 40 பேரை கள்ளச்சாராயம் கொன்றுள்ளது.
இந்தியா பீகாரில் கடந்த சில நாட்களில் கள்ளச் சாராயம் பருகி சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 40-யைக் கடந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது.
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது.
முக்கியமாக கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் பருகி 30-க்கும் மேற்பட்டோர் சாவடைந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது பேட்டையா மாவட்டத்தில் கள்ளச்சாரயம் பருகிய 4 பேர் பசாவடைந்துள்ளார். இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் பருகிர்யவகளில் 40-க்கும் மேற்பட்டோர் சாவடைந்துள்ளனர்.
கள்ளச் சாராயம் தயாரித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதற்காக காவல் நிலைய பொறுப்பாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login