செய்திகள்
அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்!!
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சில பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment Login