செய்திகள்
தரம் 5, சாதாரணதர, உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு
பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login