செய்திகள்
நியமனத்தில் புறக்கணிப்பு: போராட்டத்தில் சுகாதாரத் தொண்டர்கள்!!
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தில் 970 சுகாதாரத் தொண்டர்கள் நீண்டநாட்களாகப் பணியாற்றியிருந்த நிலையில், அதில் 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதில் ஏனையோரிற்கு நியமனம் வழங்கப்படாத நிலையில், தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம் எனவும், மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம்.
ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு, தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போதைய, புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
You must be logged in to post a comment Login