செய்திகள்
06 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமான சேவை!
6 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை ஒரு மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு சென்றதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Paris Charles De Gaulle விமான நிலையத்திற்கு செல்லும்.
அதேநாளில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் வரவுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 1980 ஆண்டில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login