செய்திகள்
பேராயர் அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு: கத்தோலிக்க எம்.பிக்கள் பங்கேற்பு
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும், கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது.
கொழும்பிலுள்ள பேராயர் அலுவலகத்தில் நடைபெறும் இச்சந்திப்பில் ஆளும் மற்றும் எதிரணிகளிலுள்ள கத்தோலிக்க எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் வருகை தந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
You must be logged in to post a comment Login