செய்திகள்
குடும்பத்தகராறால் ஏற்பட்ட விபரீதம்!
யாழ்ப்பாணம்- இளவாலைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்தமையால், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இளவாலை – உயரப்புலம் பகுதியில், இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனும்; 30 வயதுடைய நபருமே, இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login