செய்திகள்
அதிகாலையில் தீ விபத்து-நால்வர் உடல் கருகிப் பலி
இந்தியத் தலைநகர் புது டில்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.
டில்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது.
அடுக்குமாடி வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வீட்டின் 3ஆவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் தீவிபத்தில் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீவிபத்து ஏற்பட்ட வீடு உள்ள பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வருவதற்கு முன்னர் வீட்டின் 3-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login