செய்திகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்களைத் தாக்கும் ஏமன் அரசு!
ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது, சவுதிப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
ஏமன் நாட்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அரச படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
ஏமன் அரசாங்கத்திற்கு எதிராக, அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள், யுத்தம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாரி என்னும் பகுதி அங்கு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ளது. இதனையடுத்து அப்பகுதியை மீட்கவும், கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்தவும் அரச படையினர் தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.
இதற்கமைய நேற்றையதினமும் ஏமன் அரசின் படைகளால் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் சேத விபரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
You must be logged in to post a comment Login