செய்திகள்
காஸ்மீரில் தொடரும் பயங்கரவாத வேட்டை-நேற்றும் தாக்குதல்!
இந்தியா காஸ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இந்திய இராணுவம் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அங்கு இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்குமான மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன், சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் மூவர் காயமடைந்துள்ளனர்.
காஸ்மீரின் பூஞ்ச் ரஜவுரிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் கடந்த 14 நாட்களாக பயங்கரவாதிகளைத் தேடும் பணிகளை இராணுவத்தினர் முடுக்கி விட்டுள்ள நிலையில், நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login