செய்திகள்
பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்குக: அரசிடம் கோரிக்கை
பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
கொவிட் எதிரொலியால் சுமார் 2 வருடங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது.
அத்துடன், இணைய வழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சில நேரங்களில் அது நடைமுறைக்கு ஏற்றதல்ல என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆகவே பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login