செய்திகள்
எரிபொருள் தட்டுப்பாடு: காத்திருந்த மக்கள்..? (படங்கள்)
வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், வவுனியாவில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஏழாயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க அண்மையில் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login