செய்திகள்
சிறுமிகள் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்- மலாலா
ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டுமென மலாலா தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது.
பெண் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் பல தடைகள் ஆப்கனில் விதிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது குறித்து தாலிபான்களுக்கு பெரும் எதிர்ப்புகளை சர்வதேச நாடுகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மலாலாவும், ஆப்கன் பெண்களின் கல்வி சார்ந்த பல கோரிக்கைகளை தாலிபான்களுக்கு விடுத்து வருகிறார்.
மலாலாவால் வெளியிட்ட அறிக்கையில், “பெண்களின் கல்வி மறுக்கப்படுவதை எந்த மதமும் அனுமதிக்காது என்றும் ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் தடையைத் திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கனில் இயங்கும் பெண் அமைப்புகளும், பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என தாலிபான்களை வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பில் தலிபான்கள் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
You must be logged in to post a comment Login