செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராகவுள்ள, ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன்
நிறைவுக்கு வருகின்றது.
இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் அண்மைய நாட்களாக இந்திய கிரிக்கெட் சபை ஈடுபட்டு வந்தது.
இந்திய அணிக்குள் புதிய இளம் வீரர்களை உருவாக்கி வரும் டிராவிட், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்குப்
பொருத்தமானவர் என கணித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஸா ஆகியோர் நேற்றமுன்தினம் அவரிடம் பேச்சு
வார்த்தை நடாத்தினர்.
ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய டிராவிட், பின்னர் 2023ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக செயற்பட சம்மதம் வெளியிட்டார்.
ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், டிராவிட் இந்திய அணியைப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login