செய்திகள்
கனிய வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து
புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.
புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
இந்தச் சட்டமூலம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
நாட்டில் கனிய எண்ணெய் வள ஆய்வு நடவடிக்கை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமை செய்தல் என்பவற்றை இலக்காகக்கொண்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login