செய்திகள்
சுகாதார விதிமுறை மீறல் – வியாபார நிலையங்கள் தனிமையில்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பல்பொருள் அங்காடி உட்பட்ட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனாத் தொற்று வவுனியாவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு வவுனியாவில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்
இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களுக்கு எதிராக மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 5 வர்த்தக நிலையங்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி, தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் பல்பொருள் அங்காடி மற்றும் ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்களே இவ்வாறு 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன .
You must be logged in to post a comment Login