செய்திகள்
வடக்கில் 15 நாள்களில் 6,667 தொற்றாளர்கள்!
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான நிலையில் செப்டெம்பர் மாத முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, நேற்றுமுன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்கள், முல்லைத்தீவில் 25 தொற்றாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்கள் மன்னாரில் 10 தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 4 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவர் என கொவிட் தொற்றால் பலியாகியுள்ளனர் .
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை வட மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 634 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 356 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login