செய்திகள்
உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை!
உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை!
கொரோனாத் தொற்றைக் கண்டறிய புதிய பரிசோதனை முறை ஒன்றை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இந்திய மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவிக்கையில்,
கொரோனாத் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி பி.சி.ஆர். சோதனை செய்யும்முறை இந்தியாவின் ஊரக மற்றும் பழங்க பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் கொரோனாத் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, கொவிட் – 19 இன் மாதிரிகளை பரிசோதிக்கும் உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பி.சிஆர். சோதனை செய்யும் முறை காணப்படுகிறது.
வேகமான – மிகவும் எளிதான குறைந்த கட்டணத்திலான நோயாளிகளுக்கு உகந்த வகையில் இது காணப்படுகிறது. அத்துடன் பரிசோதனையின் முடிவுகளும் உடனடியாகவும் கிடைக்கப் பெறுகின்றன.
இந்த உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி பி.சி.ஆர். சோதனை செய்யும் முறையை நாடு முழுவதும் குறிப்பாக வளங்கள் குறைந்த நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதன்மூலம் விரைவான மற்றும் மக்களுக்கு சிறந்த வகையில் பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமது போராட்டமும் வலுப்பெறும் என்று கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login