செய்திகள்
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் ஏலியந்த வைட்!!
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் ஏலியந்த வைட்!!
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர் ஏலியந்த வைட்டின் நிலைமை மோசமாக உள்ளது என்று மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ஏலியந்த வைட் கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்குத் தற்போது ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், மருத்துவர் ஏலியந்த வைட் இதுவரை கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login