செய்திகள்
வாகன விபத்து – இருவர் பலி!!
வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிக்கப் ரக வாகனமும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.
வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியில் பயணித்த பிக்கப் வாகனமும், வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login