செய்திகள்
கொரோனா பாதிப்புக்களை தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பு!!
கொரோனாத் தொற்றினால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்கு போர்த்துக்கல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் 3 மருந்துகளை கண்டறிந்துள்ளனர்.
போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நோவா பல்கலைக்கழக இரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 மருந்துகளின் கலவையானது கொரோனாப் பரவலை குறைக்கும் என்று கூறுகின்றனர்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் சிசிலியா அர்ரியானோ கூறுகையில், “இந்த மருந்துகளால் வைரஸ் பரவுவது 50 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது என்பதைக் கண்டுள்ளோம்”. வைரஸ் செயற்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும்” என குறிப்பிட்டார்.
இந்த மருந்துகள், கொரோனாத் தொற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நிலைமையை கட்டுப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு மருந்துகள் ஏனைய நோய்களுக்கு மருந்தாகும், எஞ்சிய மருந்து சந்தை ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
ஆனால் அவர்கள் காப்புரிமை பிரச்சினையால் மருந்துகளின் பெயர்களை வெளியிடவில்லை.
You must be logged in to post a comment Login