uni
செய்திகள்உலகம்சுகாதாரம்

காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து!

Share

காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து!

பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களது சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பறித்துவிடப்போகிறது என்று ஐ. நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம் (Unicef) எச்சரித்துள்ளது.

காலநிலை நெருக்கடியை ஒரு சிறுவர் உரிமைப் பிரச்சினை என்று தொடர்புபடுத்தியிருக்கும் சிறுவர் நிதியம், அதன் விளைவுகள் உலக நாடுகளில் சிறுவர்களை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற அளவுச் சுட்டியை வெளியிட்டிருக்கிறது.

பருவநிலையும் சூழல் பாதிப்புகளும் ஏற்படுத்துகின்ற அதிர்ச்சிகள் நேரடியாக சிறுவர்களது வாழ்வுக்கான உரிமைகளையே பாதிக்கின்றன. வெப்பம், புயல், மழை, மாசு என எல்லா வடிவங்களிலும் தோன்றும் சீற்றங்கள் சிறுவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளைத் தடுக்கின்றன-என்று சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

அதி உச்ச அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படவுள்ள நாடுகளின் தர வரிசையில் முதல் இடங்களில் ஆபிரிக்க நாடுகளான மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், நைஜீரியா ஆகியவை உள்ளன. அவற்றுக்கு அடுத்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய தென்னாசிய நாடுகளும் அடங்கியுள்ளன.

மிகவும் அதிகளவு காபன் வெளியேற்றுகின்ற நாடுகளில் ஒன்றான இந்தியாவில் சிறுவர்களது எதிர்காலம் மிக ஆபத்தான திசையில் உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் உலகளாவிய மதிப்பீட்டு ஆய்வுகளின் படி- 240 மில்லியன் சிறுவர்கள் கடற்கரையோர வெள்ளம் காரணமாகவும், 400 மில்லியன் சிறுவர்கள் புயல்கள் காரணமாகவும், 820 மில்லியன் சிறுவர்கள் வெப்ப அனல் வீச்சாலும், 920 மில்லியன் சிறுவர்கள் தண்ணீர் பற்றாக்குறை
காரணமாகவும் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி கிரேட்டா துன்பேர்க்,(Greta Thunberg) காலநிலை பாதிப்புகள் மீது உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளிக்கிழமைகள் தோறும் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்கும் இயக்கத்தை கடந்த 2018 இல் ஆரம்பித்திருந்தார்.அந்த இயக்கம் உலகெங்கும் சிறுவர்கள் மற்றும் இளவயதினரிடையே “எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமை”( Friday for future) என்னும் பெயரில் பிரபலமாகிப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளில் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளைப் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த இயக்கம் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுவீடனில் கிரேட்டாவின் மாணவர் இயக்கம் தொடக்கப்பட்டு மூன்றாவது ஆண்டு நிறைவு நாளில் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...