சமையல் குறிப்புகள்
பாலக் பக்கோடா!
பாலக்கீரையை வைத்து பக்கோடா செய்வது எப்படி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாலக் கீரை – 2 கப்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – முக்கால் டீஸ்பூன்
வறுத்து அரைத்த சீரகத் தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி விழுது – ½ டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
சூடான எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டு, கொத்தமல்லி தழை, புதினாவைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலக்கீரையைப் போட்டு அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு, கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இறுதியாக சூடான எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போது தான் பக்கோடா பொரிப்பதற்குப் பதமாக, நன்றாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து மாவை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
இப்போது சூப்பரான பாலக் பக்கோடா ரெடி.
இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.
You must be logged in to post a comment Login