சினிமா

ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

Published

on

ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்திற்கு பின் ராஜமௌலி முதல் முறையாக மகேஷ் பாபுவை வைத்த படம் இயக்க போகிறார் என தகவல் வெளியானது.

SSMB29 என இப்படத்திற்கு தற்போதைய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் SSMB29 படத்திற்கான படப்பிடிப்பு வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாம். மேலும் இப்படத்திற்காக மகேஷ் பாபு இரண்டு ஆண்டுகள் ஒதுக்கியுள்ளாராம்.

இதுமட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் மகேஷ் பாபு கலந்துகொள்ள கூடாத என இயக்குனர் ராஜமௌலி கூறிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version