சினிமா

விஜய் மாநாட்டை முன்னிட்டு தல ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்.. ரசிகர்கள் ஷாக்

Published

on

விஜய் மாநாட்டை முன்னிட்டு தல ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்.. ரசிகர்கள் ஷாக்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் விஜய். அண்மையில் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு பெற்றது.

அடுத்து விஜய் தனது கடைசி படமான 69வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது, விஜய்யின் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளாராம்.

இந்த மாநாடு மாலை 4 மணியளவில் தொடங்கும் நிலையில் 6 மணிக்கு விஜய் உரையாற்ற உள்ளாராம். மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிய பின் விஜய் மேடைக்கு வருவார்.

இந்நிலையில், தவெக மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், விஜயை வரவேற்று அஜித் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். அதில், குறிப்பாக “தல ரசிகன், தளபதி தொண்டன்” என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

Exit mobile version