சினிமா

உயரம் குறித்து பேசிய அனிமல் பட நடிகர்.. சட்டென்று சூர்யா செய்த அதிரடி செயல்

Published

on

உயரம் குறித்து பேசிய அனிமல் பட நடிகர்.. சட்டென்று சூர்யா செய்த அதிரடி செயல்

இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக கங்குவா அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து திரையில் வெளிவரும் முதல் படம் கங்குவா என்பதால் தான்.

பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

அடுத்த மாதம் 14ஆம் தேதி கங்குவா படம் வெளிவரவிருக்கும் நிலையில், பாலிவுட்டில் தற்போதே படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு துவங்கிவிட்டன.

இந்நிலையில், கங்குவா படத்தை பாலிவுட்டில் புரமோட் செய்ய சென்ற சூர்யா பேட்டி ஒன்றில் “பாபி தியோலுடன் நடிக்க என் ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஒன்று சேர்த்து தான் அவருடன் நடித்தேன் என்று கூறினார்.

சூர்யாவின் இந்த பேச்சை கேட்டு பாபி தியோல், அதற்கு சூர்யாவின் உயரம் முக்கியம் இல்லை அவர் எந்த உயரத்தில் இருக்கிறார் என்பது தான் முக்கியம். அவர் மனதளவிலும் உயரமான ஒரு இடத்தில் தான் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் உயரம் குறித்து ஹேட்டர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இதற்கு ஒரு நல்ல பதிலடியை பாபி தியோல் கொடுத்துள்ளார்.

Exit mobile version