சினிமா

இதெல்லாம் பார்க்கும் போது தற்கொலை எண்ணம் வருகிறது… சோக பதிவு போட்ட CWC புகழ் ஷாலின் ஷோயா

Published

on

இதெல்லாம் பார்க்கும் போது தற்கொலை எண்ணம் வருகிறது… சோக பதிவு போட்ட CWC புகழ் ஷாலின் ஷோயா

மலையாள சினிமாவை பயங்கரமாக உலுக்கியுள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை.

அதில் ரசிகர்களால் நினைக்கவே முடியாத பிரபலங்கள் மீது எல்லாம் பாலியல் துன்புறுத்தல் புகார் எழும்ப பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த நடிகை மினு முனீர், கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

இந்த பாலியல் பிரச்சனை பெரியதாக பேசப்படும் நேரத்தில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் நடிகை ஷாலின் சோயா எடவேல பாபு எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது, அவர் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இதைப்பார்த்த, ஷாலின் சோயா தனது இன்ஸ்டாவில், எது சொல்வதாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா, என்ன நடந்தது தெரியுமா? அந்த டிக்டாக் வீடியோ பல வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது.

அந்த பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இங்கு பெயர் தெரியாத கொடுமையான வில்லன்கள் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன்.

ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறிய கமெண்ட்டில் இந்த கமெண்ட்டுகளை எல்லாம் பார்க்கும் போது எனக்கு தற்கொலை எண்ணம் தான் வருகிறது, ரொம்ப வருத்தமாக இருக்கிறது, நான் எந்த தவறும் செய்யவில்லை என மனம் வருந்தி பதிவிட்டுள்ளார்.

Exit mobile version