சினிமா

திடீரென வீட்டில் நிகழ்ந்த உயிரிழப்பு! கடும் துக்கத்தில் பாக்கியா குடும்பம்! நடந்தது என்ன?

Published

on

திடீரென வீட்டில் நிகழ்ந்த உயிரிழப்பு! கடும் துக்கத்தில் பாக்கியா குடும்பம்! நடந்தது என்ன?

விஜய் டிவி சீரியலில் பாக்கியலட்சுமி சீரியலுக்கான சோகமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்ட தொடர். பாக்கியா என்ற குடும்ப தலைவியின் கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

கடைசியாக எபிசோடில் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த கதைக்களத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய ராம மூர்த்தி மன சந்தோஷத்திலேயே குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளார்.

அதாவது அவரது இழப்பு சம்பவத்தால் குடும்பமே கடும் ஷாக்கில் உள்ளனர், இந்த சோகமான புரொமோ வெளியாக பார்த்தவர்கள் அனைவருமே கொஞ்சம் சோகம் அடைந்துவிட்டனர் என்று தான் கூற வேண்டும். இனி இந்த கதையில் என்ன நடைபெற போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version