சினிமா

நயன்தாராவுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு உண்மை தான்!! நடிகை திரிஷா பேட்டி

Published

on

நயன்தாராவுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு உண்மை தான்!! நடிகை திரிஷா பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

தற்போது இருவருமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் கடந்த 2008 -ம் ஆண்டு வெளியான குருவி படத்தில் நடிப்பது தொடர்பாக திரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா பேட்டியொன்றில் , எனக்கும் நயன்தாரா இடையே தவறான புரிதல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அது தொழில் காரணங்களால் அல்ல, அது தனிப்பட்ட காரணம். இதனால் சிறிது காலம் பேசாமல் இருந்தோம் என்று கூறியிருந்தார்.

இது பற்றி பேசிய நயன்தாரா, கருத்து வேறுபாட்டுக்கு பின் சமரசம் செய்ய, திரிஷா என்னை முதலில் அணுகினார். இதையடுத்து நாங்கள் பேச தொடங்கினோம் என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாராவுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு உண்மை தான்!! நடிகை திரிஷா பேட்டி | Trisha Nayanthara Fight Reason

 

Exit mobile version