சினிமா

TRP டாப்பில் இருக்கும் சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- நாயகனின் பதிவு ஷாக்கில் ரசிகர்கள்

Published

on

TRP டாப்பில் இருக்கும் சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- நாயகனின் பதிவு ஷாக்கில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் டிஆர்பியின் டாப்பில் உள்ளது.

வாரா வாரம் வெளியாகும் டிஆர்பியில் இந்த தொடர்கள் தான் டாப் 5ல் மாறி மாறி வரும். எனவே இந்த 5 தொடர்களின் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியின் முக்கிய தொடர் அதாவது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் வலம் வருகிறது.

கதையில் சுந்தரியின் கணவராக நடித்த கார்த்திக் என்கிற ஜிஜுமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனு மற்றும் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.அந்த புகைப்படத்திற்கு இறுதியாக என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் இந்த சீரியலில் அனு வரப்போகிறாரா, அதோடு கதை முடியப்போகிறாரா, டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடரை எப்படி முடிக்கிறார்கள் என ஷாக்கில் ரசிகர்கள் நிறைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் சீரியல் குழு என்ன முடிவு செய்திருக்கிறார்கள், உண்மையில் தொடர் முடியப்போகிறதா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Exit mobile version